Tuesday 30th of April 2024 11:51:48 AM GMT

LANGUAGE - TAMIL
-
வவுனியா இளைஞன் 2 ஆம் மாடியில் மூன்று மணிநேரம் விசாரணை !

வவுனியா இளைஞன் 2 ஆம் மாடியில் மூன்று மணிநேரம் விசாரணை !


ஆயுதம் தாங்கிய புகைப்படம் ஒன்றினை தனது முகநூலில் பதிவேற்றிய வவுனியாவை சேர்ந்த இளைஞன் நேற்று பயங்கரவாத விசாரணைப்பிரிவு 2 ஆம் மாடியில் மூன்று மணிநேரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைக்கு சென்றுவந்த இளைஞன் தெரிவித்துள்ளார் .

இவ்விடயம் குறித்து மேலும் அவர் தெரிவிக்கும் போது ,

வவுனியாவிலுள்ள அரசியல் கட்சி ஒன்றின் இளைஞர் அணித்தலைவரின் ஆயுதம் தாக்கிய புகைப்படம் ஒன்றினை அண்மையில் தனது முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதற்காக பயங்கரவாத விசாரணைப்பிரிவான 2 ஆம் மாடிக்கு நேற்று (30) காலை 9 மணிக்கு அழைக்கப்பட்டு பிற்பகல் 12 மணிவரை மூன்று மணிநேரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அப்புகைப்படம் நீண்ட நாட்களுக்கு பின்னர் வெளிவந்துள்ளது குறித்தும் அச்சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளவர்களின் விபரங்களும் விசாரணைகளின் போது மேலதிகமாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைக்கு சென்று வந்த இளைஞன் மேலும் தெரிவித்துள்ளார். .


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE